திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் "தச வீரட்டான ஸ்தலங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது சிறப்பம்சம் ஆகும். இந்த பத்து ஸ்தலங்களுள் ஒன்பது ஸ்தலங்கள் திருநெல்வேலி அருகிலும், பத்தாவது ஸ்தலமான திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகிலும் அமையப்பெற்றுள்ளது.
தச வீரட்டான ஸ்தலங்கள் எனப்படும் மேற்கு திசை நோக்கிய சிவாலயங்கள்:
1. பக்த ஸ்தலம்: சிவசைலம் ஸ்ரீ சிவசைலப்பர் திருக்கோவில்.
2. மகேச ஸ்தலம்: வழுதூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில்.
3. பிராண லிங்க ஸ்தலம்: கோடகநல்லூர் ஸ்ரீ அவிமுக்தீஸ்வரர் திருக்கோவில்.
4.ஞானலிங்க ஸ்தலம்: சிங்கிகுளம் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்.
5. சரண ஸ்தலம்: மேலநத்தம் ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில்.
6. சகாய ஸ்தலம்: ராஜவல்லிபுரம் ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில்.
7. பிரசாதி ஸ்தலம்: தென்மலை ஸ்ரீ திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோவில்.
8. கிரியாலிங்க ஸ்தலம்: அங்கமங்கலம் ஸ்ரீ நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோவில்.
9. சம்பத் ஸ்தலம்: காயல்பட்டினம் ஸ்ரீ மெய்கண்டேஸ்வரர் திருக்கோவில்.
10. பஞ்சாக்ர ஸ்தலம்: திற்பரப்பு ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.