Logo of Tirunelveli Today

முக்கூடல் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி கோவிலில் சுமங்கலி பூஜை

September 12, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி கோவிலில் சுமங்கலி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
  • ஆயிரத்தெட்டு சுமங்கலிகள் கலந்துகொண்ட இந்த பூஜை ஸ்ரீ ஹரி கைலாஷ் அடியார்கள் மற்றும் பாரதி அமைப்பு சார்பில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரம் உள்ள அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோவிலில் 1008 சுமங்கலி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.ஸ்ரீ ஹரி கைலாஷ் அடியார்கள் மற்றும் சேவா பாரதி அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பூஜையில் தருமை ஆதீனம் தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்தம் பிரான் சுவாமிகள் தலைமை ஏற்று குத்து விளக்கை ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சேவாபாரதி அமைப்பின் மாவட்ட சமூக நலன் பிரிவு நிர்வாகி உமா கார்த்திக் , பாப்பாகுடி ஒன்றிய செயலர் கல்யாணி மற்றும் கிராம சேவிகா மாரியம்மாள் ஆகியோர் பங்கேற்று பூஜையை ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள்.

மாவட்ட ஆயாம் சுப்ரமணியன், அம்பாசமுத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் ரவி, ராமசாமி, கண்ணன், சேவாபாரதி அமைப்பின் மாவட்ட செயலாளர் வீரராகவன், துணை தலைவர் கண்ணன் ,பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் இந்த பூஜையில் பங்கேற்றனர். ஆயிரத்தெட்டு சுமங்கலி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify