திருநெல்வேலியில் டிரோன்களை பறக்க விட தடைவிதிக்கப்பட்டுள்ளது!இந்திய எல்லைப்பகுதியான காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிரோன்கள் மூலமாக இந்திய விமானப்படை தளம் மற்றும் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனையடுத்து மத்திய அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டில் உள்ள ராணுவ முகாம்கள், அணு உலைகள், ஆராய்ச்சி மையங்கள், ஆயுத தொழிற்ச்சாலைகள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடைவிதித்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியிலும் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிலையம், […]
மேலும் படிக்க