திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணு மின்நிலையத்தில் ஏற்கனவே 1, 2 இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக 3 மற்றும் 4 வது அணு உலையின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. தற்போது மூன்றாம் கட்டமாக சுமார் 49 ஆயிரத்து 621கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 5 மற்றும் 6 வது அணு உலைகள் அமைக்கும் பணி நேற்று காலை பூமி பூஜையுடன் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியை இந்திய அணுசக்தித்துறை தலைவர் கே.என்.வியாஸ் அவர்கள், ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழக இயக்குனர் அலெக்சி லிக்காசெவி அவர்கள் ஆகியோர் காணொளி காட்சி மூலம் துவங்கி வைக்க, கூடங்குளம் அணு உலை வளாக இயக்குனர் ராஜிவ் மனோகரன் காட் பிளே அவர்கள், ஐந்து மற்றும் ஆறாம் அணு உலைகளுக்கான திட்ட இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ் அவர்கள், நிலைய இயக்குனர் சுரேஷ்பாபு அவர்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நேரில் கலந்து கொண்டனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.