திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தற்போது நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இங்கு சுமார் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன ரத்த பரிசோதனை கருவி நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன கருவியின் செயல்பாட்டை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் துவக்கி வைத்தார்.
பொதுவாக நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல கோளாறுகளை கண்டறிய ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். நடைமுறையில் உள்ள ரத்த பரிசோதனை முறைப்படி முடிவுகளை தெரிந்துகொள்ள குறைந்தது இரண்டு மணி நேரம் வரை ஆகலாம். ஆனால் இந்த நவீன கருவி மூலம் ஒரு நிமிடத்திலேயே பரிசோதனை முடிவுகளை நாம் பெற்றுவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நோயாளிகளுக்கு தாமதமின்றி தேவையான சிகிச்சைகளை அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.