Logo of Tirunelveli Today

துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து செல்வம் கடாட்சம் பெறுவதற்கு வராகி அம்மன் வழிபாடு

September 14, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

பூலோகத்தை காப்பதற்கு அவதாரமெடுத்த வராகமூர்த்தி பன்றி உருவத்தில் பக்தர்களுக்கு காட்சி அருள்கின்றார்.அவருக்கு உதவி செய்வதற்காக வராகியம்மன் எழுந்தருளினார் என்பது வரலாறு . ஆபத்து எங்கு இருக்கின்றதோ அங்கெல்லாம் வராகி அம்மன் வந்து காப்பாற்றுவாள் என்பது ஐதீகம்.

நமக்குத் துன்பம் நேரும்போது வராகி அம்மனை மனதார வழிபட்டால் வந்த துன்பமும் பனி போல் நீங்கி விடும், ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றுபவளும் அவளே .. சகல சௌபாக்கியம் வரங்கள் அனைத்தும் கொடுப்பவளும்அவளே ..நமக்கு சக்தியை கொடுத்து வாழ்க்கையில் நலம் கொடுப்பவளும்அவளே. வராகி அம்மன் பன்றி உருவத்தில் எழுந்தருளியதால் நாராயணனின் அம்சமாக விளங்குகிறாள்.வராகி அம்மனின் திருஉருவ படத்தை விசேஷமாக வைத்து வழிபட்டால், கூடிய விரைவில் சகல சவுபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும். நமக்கு ஒரு தாயாக இருந்து நம்மை காக்கின்றாள். அவளுக்கு மிகவும் பிடித்தது மரவள்ளிக்கிழங்கு என்பதால் நிவேதனமாக மரவள்ளிக்கிழங்கு வெண்பூசணிக்காய் பிரசாதமாக வைக்கலாம்.

வராகி அம்மனுக்கு நைவேத்தியங்கள் வைத்து படைப்பது , வீடு முழுவதும் சாம்பிராணி, வெண்கடுகு போட்டு தூபம் காட்டுவது ..இப்படி செய்வதால் வராகி அம்மனின் அருளை நாம் முழுமையாகப் பெறுவோம். தொடர்ந்து இவ்வாறு செய்வதால் வராகி அம்மன் அனுக்கிரகத்தை நாம் முழுமையாகப் பெற்று துன்பங்கள் அனைத்தும் விலகி வாழ்வினில் நல்ல முன்னேற்றங்களை காணலாம்.

தொடர்ந்து 48 நாட்கள் பிரம்ம முகூர்த்தத்தில் வராகி அம்மனை வழிபட்டு வந்தால் , கண்திருஷ்டி பொறாமை ,பில்லி சூனியம் , ஏவல் துஷ்ட சக்திகள் , அனைத்தும் மாயமாக மறைந்துவிடும். வராகி அம்மனை நாம் அனைவரும் தொடர்ந்து வழிபட்டு அனைத்து நலனும் பெற்று சிறப்பு காண்போம்.

Image source: Aanmeegam.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify