தூத்துக்குடி மாநகரில் உள்ளது பழம்பெருமை வாய்ந்த வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில். சங்கரராமேஸ்வரர் (சிவன்) கோவிலுக்கு அருகில் அமையப்பெற்றுள்ள பழமையான இந்த பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கல் தூண்களை சீரமைத்தல், மண்டபத்தை பழுது பார்த்தல், சுவாமி சன்னிதியை சீரமைத்தல், பிரகார மண்டபங்களை சீரமைத்தல் உட்பட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ள ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று தமிழக அமைச்சர் திருமதி.கீதாஜீவன் முன்னிலையில் திருப்பணி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பணி கமிட்டி தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.