திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையராக நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திரு.துரைராஜ் அவர்கள் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் திருநெல்வேலி மாநகர் தனக்கு புதிய இடம் என்பதால் அதுகுறித்த தகவல்களை தாம் சேகரித்து வருவதாகவும், மாநகரில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், போக்குவரத்து நெருக்கடியை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குற்றச் செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை இணை ஆணையர்கள் டி.பி.சுரேஷ்குமார் (கிழக்கு மண்டலம்), கே.சுரேஷ்குமார் (மேற்கு மண்டலம்), நாகசங்கர் (நுண்ணறிவு பிரிவு), ஆய்வாளர் பிறைச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.