செய்தி சுருக்கம்
- நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந் திருவிழா வருகிற 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 11ஆம் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறும்
நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா நடப்பதற்கு முன்பாக கோவிலில் திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம் .
தொடர்ந்து பிள்ளையார் திருவிழா முதல் மூவர் திருவிழா நடைபெறும் .பிடாரி அம்மன் கோவிலில் திருவிழா முடிந்து நேற்று பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
இதையொட்டி நேற்று காலை ஆறு மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள சிறிய கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது . தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவில் பிள்ளையார் மூச்சு ஒரு வாகனத்தில் பலவண்ண விளக்குகள் ஜொலிக்க , பக்தி பிரவாகமாய் உள்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
.
தினமும் காலையிலும் மாலையிலும் ஸ்வாமி சன்னதி முன்பு உள்ள பெரிய விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் இரவு பிள்ளையார் மூஞ்சூறு வாகனத்தில் வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.
ஆஹா அற்புதமான காட்சி , ஆனந்தக் காட்சி, அகிலமே அடங்கி ஒடுங்கி எம்பெருமானை தரிசிக்கும் காட்சி என மக்கள் அனைவரும் இரு கைகளையும் கூப்பி விநாயகப்பெருமானின் அபிஷேக அலங்கார தீபாராதனை கண்டுகளித்தனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.