Logo of Tirunelveli Today

தெய்வ வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு என்றால் என்ன?

June 15, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தெய்வ வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி காண்போம்

வழிவழியாக நம்முடைய முன்னோர் காலத்தில் இருந்தே குலதெய்வத்தை வழிபடுவது என்பதை வழக்கமான சம்பிரதாயமாக வைத்திருக்கின்றோம்.

நாம் முறையாக வருடாவருடம் குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு வேண்டி வழிபட்டால் ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் நம்மை காப்பாற்றும் .

ஒரு மனிதனுக்கு ஏழு பிறப்பு உண்டு என்பதை அறிந்து இருப்போம். பிறக்கும் சன்னதிக்கும் அதே ஏழு பிறப்பு உண்டு. 7 சந்ததிகள் கொண்டது ஒரு வம்சம் இந்த வம்சம் நலமாக வளமாக வாழ்ந்து முடிவடைய வேண்டும் என்பதற்கான வேண்டுதலே குலதெய்வ வழிபாடு.

முன்னோர்கள் வழி வழியாக வழிபட்டு வந்த குலதெய்வத்தை நாம் வணங்குவதால் , நம் முன்னோர்களின்ஆசியை மட்டுமின்றி, குலதெய்வத்தின் அருளையும் நாம் பெறுகிறோம்.

தெய்வ வழிபாடு எ ன்பது..நம்முடையகஷ்டங்கள் அனைத்தும் விலக வேண்டும் என வேண்டுவது தெய்வ வழிபாடு .

நம்முடைய வினைப்பயன்கள் அனைத்தும் விலக வேண்டும் என்பது தெய்வ வழிபாடு .

நமக்கு செல்வங்கள் அனைத்தும் பெற்று வாழ்க்கையில் சிறப்போடு வாழ வேண்டும் என்பது தெய்வ வழிபாடு.

குல தெய்வ வழிபாடு என்பது…

தெய்வத்தின்அருளால் கிடைத்த இவை அனைத்தும் நிலைக்க வேண்டும் வாழ்க்கையில் சிறப்பு அடைய வேண்டும் என நினைத்து வேண்டுவது குலதெய்வ வழிபாடு. குலதெய்வத்தை வேண்டும்போது நம்முடைய முன்னோர்கள் ஆசியும் நமக்கு கிடைக்கிறது.

ஒரு ஆலமரம் போன்று வாழ்க்கை தழைத்து வளர வேண்டுமெனில், ஆணி வேராக அமைவது குலதெய்வ வழிபாடு.

ஒரு அழகிய நந்தவனம் போன்று குளிர்ச்சியாக, வாழ்க்கை அமைவதற்கு அடித்தளமாய் அமைவதும் குலதெய்வ வழிபாடு.

திருமணம் கனிவதற்கும் திகட்டாத வாழ்வு பெறுவதற்கும் , சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் வாழ்வினில் இனிமை பெற்று, செல்வங்கள் பல பெற்று மனமொத்த தம்பதியராக மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ்வதற்கும் வருடாவருடம் பொங்கல் வைத்து குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமாக செய்ய வேண்டும்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify