செய்திக்குறிப்புகள்:
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழா.
- ஏழாம் திருநாளான நேற்று நடராஜர் வெள்ளை சாத்தி தரிசனம்.
திருநெல்வேலி காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவின் ஏழாம் திருநாளான நேற்று இரவு நடராஜர் வெள்ளை சாத்தி திருக்கோலத்தில் எழுந்தருளும் விழா நடைபெற்றது.
இதையொட்டி நேற்று இரவு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வெள்ளை வஸ்திரம் மற்றும் வெள்ளை நிற பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளை சாத்தி கோலத்தில் திருக்கோவிலுக்குள் உள்ள பெரிய பிரகாரத்தில் நடராஜர் உலா வர, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Image source: Facebook.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.