செய்திக்குறிப்புகள்:
- மாசி விசாகம் நம்மாழ்வார் திருவுருவம் தாமிரபரணியில் கிடைத்த நாள்.
- நாளை தாமிரபரணியில் நம்மாழ்வார் தீர்த்தவாரி.
வைகாசி விசாகம் அன்று நம்மாழ்வார் அவதரித்த தினம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதுபோல மாசி விசாகம் அன்று ஆழ்வார்திருநகரியில் உள்ள நம்மாழ்வார் திருவுருவம் தாமிரபரணியில் இருந்து கிடைத்த தினம் ஆகும்.
இதனை ஒட்டி ஆழ்வார்திருநகரி கோவிலில் மாசி மாதம் 13 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒன்பதாம் திருநாளில் நம்மாழ்வார் தேரோட்டமும், பதிமூன்றாம் திருநாளான மாசி விசாகம் அன்று தீர்த்தவாரியும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி விசாகம் நாளை 23/02/2022 வருவதை ஓட்டி, தாமிரபரணியில் நம்மாழ்வார் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.
Image source: Facebook.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.