செய்திக்குறிப்புகள்:
- சிதம்பரம் பொற்சபை, திருநெல்வேலி தாமிரசபை இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை.
- உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்று நிலைகளில் பெருமான் காட்சி.
சிவபெருமான் திருநடனம் புரிந்த பஞ்சசபைகளுள் சிதம்பரம் பொற்சபையிலும், திருநெல்வேலி தாமிரசபையிலும் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் பெருமான் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
சிதம்பரம்:
1.உருவம்: சித்சபாபதி.
2.அருவுருவம்: சபைக்குள் உள்ள லிங்கம்.
3.அருவம்: சபை ரகசியம்.
திருநெல்வேலி:
1.உருவம்: சந்தனசபாபதி.
2.அருவுருவம்: ஆகாசலிங்கம்.
3.அருவம்: தாமிரசபை.
திருநெல்வேலி தாமிரசபைக்குள் சிவபெருமான் அருவமாக எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். எனவே இங்கு அனைத்து கால வழிபாடுகளிலும் தாமிரசபைக்கும் பூஜை நடைபெறும் என்பது சிறப்பம்சம்.
Image source: Facebook.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.