Logo of Tirunelveli Today

தோவாளையில் பூக்கள் விலை கடும் உயர்வு!

March 4, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

பூக்களின் விலை கடும் உயர்வு.

பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.3000க்கு விற்பனை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை பூக்கள் வாங்க மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் இங்கு பூக்கள் வாங்க தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து அதிகளவு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வருவார்கள்.

தோவாளையில் தினம்தோறும் பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும் நிலையில் அய்யா வைகுண்டர் அவதார தினம் இன்று கொண்டாடப்படுவதை ஓட்டி பூக்களின் தேவை அதிகரித்ததால் நேற்றே பூக்களின் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.1250 க்கு விற்பனையான பிச்சிப்பூ நேற்று ரூ. 3000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல மற்ற பூக்களின் விலையும் அதிகரித்தே காணப்பட்டது.

மற்ற பூக்களின் விலை நிலவரம்:

முல்லை ரூ.2500
அரளி ரூ.220
மல்லிகை ரூ.1200
சம்பங்கி ரூ.250
கனகாம்பரம் ரூ.550
வாடாமல்லி ரூ.80
துளசி ரூ.45
தாமரை (100 எண்ணம்) ரூ.1500
கோழிக்கொண்டை பூ ரூ.60
பச்சை (ஒரு கட்டு) ரூ.8
ரோஸ் பாக்கெட் ரூ.30
பட்டன் ரோஸ் ரூ.160
ஸ்டெம் ரோஸ் (ஒரு கட்டு) ரூ.200
மஞ்சள் கேந்தி ரூ.50
சிவப்பு கேந்தி ரூ.60
மஞ்சள் செவ்வந்தி ரூ.220
வெள்ளை செவ்வந்தி ரூ.230
கொழுந்து ரூ.100
மரிக்கொழுந்து ரூ.120

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify