Logo of Tirunelveli Today

மண்டைக்காடு கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

February 28, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • மண்டைக்காடு மாசி கொடை விழா துவக்கம்.
  • செண்டை மேளம், தவில், நாதஸ்வரம் முழங்க கொடியேற்றம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுகிறது. இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் பெண் பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து அம்மனை வழிபடுவது வழக்கம்.

பிரசித்தி பெற்ற இந்த பகவதியம்மன் கோவிலின் மாசி கொடை விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 5.00 மணிக்கு கணபதி ஹோமமும், 6.00 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6.30 மணிக்கு உஷத்கால பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேள தாளத்துடன் புறப்பட்டு, கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட, கோவிலின் முன்புள்ள கொடிமரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் மனோ தங்கராஜ், விஜயகுமார் எம்.பி., குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், திருக்கோவில் நிர்வாக இணை செயலாளர் ஞானசேகர், கல்குளம் தாசில்தார் வினோத், சிறப்பு தாசில்தார் ரமேஷ், கோவில் தந்திரி சங்கர நாராயணன், கண்காணிப்பாளர் செந்தில்குமார் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify