Logo of Tirunelveli Today

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விதை தொகுப்பு வழங்கல்.

January 22, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நரிக்குடி வட்டரத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி அரசு தோட்டக்கலை பண்ணையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நரிக்குடி வட்டாரத்திலுள்ள 15 ஊராட்சிகளிலுள்ள 650 சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்கும் வகையிலான ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைத்திடும் வகையில் அரசு தோட்டக்கலை பண்ணையிலிருந்து பப்பாளி, முருங்கை, பீர்க்கன், புடலை, கத்தரி, மற்றும் கீரை போன்ற செடிகள், விதைகள், கன்றுகள் அடங்கிய விதை தொகுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த விதைகள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட திட்ட இயக்குனர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.உதவி திட்ட அலுவலரான தங்கப்பாண்டியன் கலந்துகொண்டு சுய உதவிக்குழு பெண்களுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இதில் கலந்து கொண்ட சுயஉதவிக்குழு பெண்கள் ஆர்வமுடன் விதை தொகுப்பு மற்றும் செடிகள், கன்றுகளை பெற்றுச்சென்றனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify