செய்திக்குறிப்புகள்:
சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற மேயர் தேர்தல்.
திருமதி. சங்கீதா இன்பம் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவகாசி மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மேயருக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருமதி. சங்கீதா இன்பம் மனு தாக்கல் செய்தார். அவரின் விருப்ப மனு மாநகராட்சி ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மனுத்தாக்கலுக்கான நேரம் முடியும் வரை வேறு யாரும் மேயர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யாததால், திருமதி. சங்கீதா இன்பம் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஷ் பிரியா காளிராஜன் அவர்களும் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பதவியேற்றுக் கொண்டனர். அப்போது அங்கு கூடியிருந்த இருந்த கவுன்சிலர்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவில் தமிழக அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் கலந்து கொண்டு புதிய மேயருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.