- பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் சந்திப்பு.
- பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் சந்திப்பு.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன்களை கொண்டவர்களை கண்டறிந்து ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் ஒரு மாணவர் என தேர்ந்தெடுத்து, வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சியருடன் நேரில் சந்திக்க வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று சாத்தூர் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் ஆட்சியருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 20 பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொது அறிவு மற்றும் அகராதி புத்தகங்களை ஆட்சியர் திரு. மேகநாதரெட்டி அவர்கள் பரிசாக வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
Image Source: dailythanthi