- ஆசியாவின் மிகப்பெரிய தனி விநாயகர் கோவில்.
- மடியில் தேவியுடன் அமர்ந்த நிலையில் காட்சித்தரும் விநாயகர்.
திருநெல்வேலி மாநகரின் தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் திருக்கோவில். விநாயகருக்கென அமையப்பெற்றுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவில், ஆசியாவின் மிகப்பெரிய தனி விநாயகர் கோவில் என்ற சிறப்பை பெறுகிறது.
தனிக்கொடிமரம், தனி ராஜகோபுரம், உள் மற்றும் வெளி பிரகாரங்கள் ஆகியவற்றுடன் அமையப்பெற்றுள்ள இந்த கோவிலின் பிரதான கருவறையில் தனது தேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சித்தருகிறார் உச்சிஷ்ட விநாயகர். விநாயக பெருமானின் 32 வடிவங்களுள் காண்பதற்கரிய உச்சிஷ்ட விநாயகர் திருக்கோலத்தில் இங்கு காட்சிதரும் விநாயகரை வணங்கினால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும் என்பதும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இந்த கோவில் பற்றிய கூடுதல் தகவல்களை https://news.tirunelveli.today/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.
Image source: Facebook.com