செய்திக்குறிப்புகள்:
- ஆசியாவின் மிகப்பெரிய தனி விநாயகர் கோவில்.
- மடியில் தேவியுடன் அமர்ந்த நிலையில் காட்சித்தரும் விநாயகர்.
திருநெல்வேலி மாநகரின் தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் திருக்கோவில். விநாயகருக்கென அமையப்பெற்றுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவில், ஆசியாவின் மிகப்பெரிய தனி விநாயகர் கோவில் என்ற சிறப்பை பெறுகிறது.
தனிக்கொடிமரம், தனி ராஜகோபுரம், உள் மற்றும் வெளி பிரகாரங்கள் ஆகியவற்றுடன் அமையப்பெற்றுள்ள இந்த கோவிலின் பிரதான கருவறையில் தனது தேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சித்தருகிறார் உச்சிஷ்ட விநாயகர். விநாயக பெருமானின் 32 வடிவங்களுள் காண்பதற்கரிய உச்சிஷ்ட விநாயகர் திருக்கோலத்தில் இங்கு காட்சிதரும் விநாயகரை வணங்கினால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும் என்பதும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இந்த கோவில் பற்றிய கூடுதல் தகவல்களை https://news.tirunelveli.today/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.
Image source: Facebook.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.