Logo of Tirunelveli Today

மின்னொளியில் ஜொலித்த நெல்லையப்பர் கோவில்!

March 2, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்.
  • மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த கோவில் கோபுரம்.

திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நேற்று நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருக்கோவில் ராஜ கோபுரம், முன் மண்டபம், பிரகாரங்கள் ஆகியவற்றில் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதனால் தூரத்தில் இருந்து பார்க்கும் போதே நெல்லையப்பர் கோவில் ராஜ கோபுரம் இருட்டிலும் வண்ணமயமாக ஜொலித்தது. மேலும் திருக்கோவில் பிரகாரங்கள் மற்றும் நுழைவு வாயிலில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நடராஜர் உருவம் மற்றும் விளக்குகள், சிவலிங்க உருவம் ஆகியவை பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. பல பக்தர்கள் இந்த மின்விளக்கு அலங்காரங்களை தங்கள் கைப்பேசியில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

திருக்கோயிலுக்கு வருகை தந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த மின் விளக்கு அலங்காரங்களை கண்டு ரசித்தபடியே சிவராத்திரியில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2026 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify