Logo of Tirunelveli Today

பருப்பு வகைகளை பதுக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

September 13, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் இன்றியமையா சட்டம் 1955 ன் கீழ் வர்த்தகர்கள் தங்களுடைய பருப்பு, இருப்பு விவரங்கள் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
  • சட்டத்தை மீறி பருப்புகளை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பருப்பு வகைகளை பதுக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்துஆட்சியர் தம்முடைய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்றியமையா சட்டம் 1955 ன் கீழ் , அரவை முகவர்கள், இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் தங்களுடைய நிலுவை இருப்பு விவரங்களை இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது .

பண்டிகை காலங்களில் பருப்பு பதுக்கலை தடுக்கும் நோக்கோடு அனைத்து மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களில் கண்காணிக்கும் விதத்தில் இதைசெயல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ,பாசிப்பருப்பு முதலியபருப்புகளை பதுக்கும் நோக்கத்தோடு யாராவது செயல்பட்டால் அதற்கான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து முகவர்கள், பெரும் வணிகர்கள், அரவை முகவர்கள், ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய பருப்பு வகைகளின் இருப்புநிலை விவரங்களை தினந்தோறும் இணைய தளத்தில் பதிவிட வேண்டும் என்று தம்முடைய செய்திக்குறிப்பில் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify