செய்திக்குறிப்புகள்:
- நெல்லை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 15- 9 -2022 வியாழக்கிழமை அன்று மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெற இருக்கிறது.
- சைக்கிள் போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற போவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நடக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் வே . விஷ்ணு அறிவித்துள்ளார் .
இது பற்றி அவருடைய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அதனை முன்னிட்டு அண்ணா விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற இருக்கிறது. செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி காலை 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்,
மூன்று பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்படுகின்றது . பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி டி ஜி ஜி பங்களா வழியாக திருச்செந்தூர் அமைந்துள்ள சாலையில் மாணவ மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடைபெற இருக்கிறது.
போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் தங்களது வயது சான்றிதழ், பள்ளித் தலைமை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று 13-9- 2022 செவ்வாய்க்கிழமை தேதிக்குள் நெல்லை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.இந்தியாவில் தயாராகும் சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிள்களை மட்டுமே போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Image source:tamilonline.com