Logo of Tirunelveli Today

நெல்லையில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் 30,658 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

September 8, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 30,658 பேருக்கு 8 -9 - 2022 வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
  • மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 8 -9 - 2022 வியாழக்கிழமை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 30,658 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

திருநெல்வேலி மாநகராட்சி ஊராட்சித் துறை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை சட்ட கல்வித்துறை, குடிநீர் வழங்கல் துறை, உழவர் நலத்துறை ,இந்திய மருத்துவம் பள்ளிக்கல்வித்துறை ,ஓமியோபதி துறைகளில் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இருந்தன. அவை அனைத்தையும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.

கால்நடை பராமரிப்பு துறை. ஊரக வளர்ச்சி கல்வித்துறை. நகராட்சி நிர்வாகம் மீன்வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவக் கல்வித் துறை ,பள்ளிக்கல்வித்துறை போன்ற துறைகளில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

கூட்டுறவு துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,ஊரக வளர்ச்சி துறை ,சமூக நலன் மகளிர் உரிமை துறை,தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம், முன்னோடி வங்கி தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை பள்ளி கல்வித்துறை, மலைப்பயிர்கள் துறை, மருத்துவம் மக்கள் நலவாழ்வு துறை என அனைத்துத் துறைகளின் சார்பில் 30,658 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

திருநெல்வேலி மாநகர காவல் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify