Logo of Tirunelveli Today

வருகிற 8;ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லைக்கு வருகை

August 30, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 8ஆம் தேதி நெல்லைக்கு‌ வருகிறார்.
  • மு க ஸ்டாலின் வருகையை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது பற்றி மேயர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் வருகிற 8- 9 -2022 அன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நெல்லைக்கு வர இருக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மேயர் பி.எம் சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றஆண

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பி எம் சரவணன் தலைமை தாங்கினார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது;

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்
.
அந்த வகையில் நெல்லைக்கு வருகிற எட்டாம் தேதி வியாழக்கிழமை வர இருக்கிறார். பாளையங்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு நெல்லை அரசுத்துறை வாரியாக முடிவடைந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க இருக்கிறார் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் முடிக்க உள்ள பணிகளையும் திறந்து வைக்க இருக்கிறார்.

முதல்வர் வருகையொட்டி விழா நடைபெறும் மைதானத்தை சமன்படுத்துதல், சாலைகளை தூய்மைப்படுத்துதல் பணி, பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து தருதல், தெருவிளக்குகள் சீராக இயங்குதல் என அனைத்து பணிகளும் கவனத்துடன் மேற்கொண்டு விழா சிறப்பாக நடைபெற மாநகர மாநகராட்சி சார்பாக செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் சிறப்பாக செய்ய வேண்டும். என்று மேயர் பி எம் சரவணன் தெரிவித்தார்

கூட்டத்தில் மாநகர செயற்பொறியாளர்கள் வாசுதேவன், பாஸ்கர், உதவி ஆணையாளர்கள் லெனின் பைஜூ, வெங்கட்ராமன் ராமசாமி மாநகர நல அலுவலர ஆனி குயின் சுகாதார அலுவலர்கள் இளங்கோ, ஷாகுல் ஹமீது, முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify