Logo of Tirunelveli Today

பணப் பயிர்களில் ஒன்றான வாழை நார் உற்பத்தி தீவிரம்

July 26, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி சுருக்கம்:

  • திருநெல்வேலி மாவட்டத்தில் மழை இல்லாததால் வாழை நார் உற்பத்தி தீவிரம்
  • வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வாழைநார் உற்பத்தி தீவிர படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தகவல்

வாழையடி வாழை என்று நம்முடைய குலத்திற்கு பெருமை சேர்க்கும் வாழை என்பது விவசாயிகளுக்கு மிகவும் பிடித்தமான சாகுபடி என்ற பெயர் பெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பணப் பயிர்களில் ஒன்றாகவும் வாழை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. வழக்கத்தைவிட இந்த வருடம் சாரல் மழை இல்லாததால் வாழை மர சாகுபடிக்கு ஏற்றதாகவும் விவசாயிகளுக்கு அமைந்துள்ளது. வெயிலின் தாக்கம்அதிகரித்துள்ளதால் நார் உற்பத்தியின் திறனும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அருகே அமைந்துள்ள பழவூர், சுத்தமல்லி சுற்றுப்பகுதியான தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டிருந்தன. வாழையில் பல ரகங்களான ரதகதலி, ரோபஸ்டா, செவ்வாழை, ஏத்தன், மட்டி போன்றவை அதிகம் பயிரிடப்பட்டிருந்தன.

இப்பொழுது வாழைகளில் தார்கள் அறுவடை முடிவடைந்த நிலையில், அங்கு வாழை நார் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாவது:

ஜூலை மாதத்தில் எப்பொழுதும் தாமிரபரணி கரையோர பகுதியில் வாழைத்தார் அறுவடை முடிவடைந்துவிடும். ஆனாலும் ஒவ்வொரு வருடமும் மேகமூட்டமும், சாரல் மழையும் தொடர்ந்து இருப்பதால் வாழை உற்பத்தி பாதிக்கும். ஆனால் இந்த வருடம் சாரல் மழை இல்லாது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வாழைநார் உற்பத்தியும் இதனால் அதிகரிக்கும் என்று கூறினர்.

தொடர்ந்து இரு நாட்கள் வாழைநார்கள் காய வைக்கப்படும். காய்ந்த பிறகு அவையாவும் சேகரிக்கப்பட்டு பைகள், காலனி, புடவைகள் என பலவிதமான மதிப்புள்ள பொருட்களாக தயாரிக்கப்படுகின்றன. இதனால் எங்களுக்கு வாழை உற்பத்தி லாபகரமான தொழிலாகவும் மாறி உள்ளது என்று மேலும் மகிழ்ச்சியுடன் விவசாயிகள் தெரிவித்தனர்.

தாய் மண்ணை தெய்வமாய் போற்றி வணங்கும் விவசாயிகளின் மகிழ்ச்சி எப்பொழுதும் நிலைத்து நீடிக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுதலாகவும் அமையட்டும்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்
1 2 3 21

இதையும் படிக்கலாமே..

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2023 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify