Logo of Tirunelveli Today

ஆடி அமாவாசை முன்னிட்டு வரும் பக்தர்கள், மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகளுக்கு செல்ல தடை

July 26, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி சுருக்கம்:

  • நெல்லை மாவட்டம் ஜூலை 28 ஆம் தேதி வியாழக்கிழமை ஆடி அமாவாசை திருவிழா சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெற உள்ளது.
  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகளுக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பை காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 28ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. நெல்லை மாவட்டம் சுற்றியுள்ள தென்காசி, தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் திருவிழாவை ஒட்டி வரும் பக்தர்கள் மணிமுத்தாறு பாபநாசம் அருவிகளுக்கு செல்ல கூடாது என அரசு தடை விதித்துள்ளது.

தனியார் வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும். திருவிழாவிற்கு பக்தர்கள் தனியார் வாகனங்களில் வந்தால் அம்பை அகஸ்தியர் பட்டியில் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து அரசு பஸ்களில் செல்லலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று அரசு பல கட்டுப்பாட்டுகளை விதித்து இருக்கிறது.

போலீசார் வனத்துறையினர், பள்ளி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வருகிற 30-ஆம் தேதி சனிக்கிழமை வரை களக்காடு, முண்டத்துறை புலிகள் காப்பகம் செல்லவும் தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி மாஞ்சோலை குதிரைவெட்டியில் உள்ள ஓய்வு இல்லம், பாபநாசம் அகஸ்தியர் மணிமுத்தாறு அருவிக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify