Logo of Tirunelveli Today

ஜூலை 11ஆம் தேதி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்

July 9, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்தி அம்மன் திருக்கோவில் ஆனித் தேரோட்டம்
  • ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் வே விஷ்ணு அறிவிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்தி அம்மன் திருக்கோவில் ஆனித் தேரோட்டம்
ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருப்பதால் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை என மாவட்ட கலெக்டர் வே விஷ்ணு அறிவித்துள்ளார்.

அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும், சேர்த்து உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகின்றது .

அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் அனைத்தும் எவ்வித தடங்களும் இன்றி நடைபெறும்.

விடுமுறை அளிக்கப்பட்டாலும் பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் , பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலகங்களுக்கு பொதுத்தேர்வு தொடர்பாக பணிகள் இருந்தால் இந்த உள்ளூர் விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செலவாணி முரிச்சட்டம் 1881 இன் கீழ் இந்த விடுமுறை சட்டம் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை பொருந்தாது.

குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்க் கருவூலங்களும் அரசு கோப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் .ஜூலை 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் தன்னுடைய செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.

Image source: tamil.oneindia.com/

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2026 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify