திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. வருகின்ற 5-9-2022 அன்று கரூர் சித்தருக்கு காட்சி தரும் வைபவமும் நடைபெற இருக்கிறது. நெல்லை டவுன் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோவிலில் வருடம் தோறும் ஆவணி மூலத் திருவிழா மிகவும் நடைபெற்று வருகிறது.
மானூரில் கரூர் சித்தருக்கு நெல்லையப்பரே வந்து காட்சி தந்த தினம் என்பதால் அன்றைய தினத்தில் ஆவணி மூல திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று நெல்லையப்பர் கோவிலில் கொடி மரத்திற்கு தீபாஆராதனை நடைபெற்றது. நேற்று காலை சுவாமி சன்னதியில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது . ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். திருவிழாவில் நான்காவது நாளான 29-8-2022 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடைபெற இருக்கிறது.
.3- 9- 2022 இரவு 9 மணிக்கு கரூர் சித்தர் மானூருக்கு புறப்பட்டு செல்கின்ற வைபவ நிகழ்ச்சி நடைபெறுகிறது .அடுத்து அனைத்து சுவாமிகளும் பல்லக்கு மற்றும் சப்பரங்களில் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து மானூருக்கு புறப்பட்டு செல்வார்கள் .
ஏழு மணிக்கு கரூர் சித்தருக்கு காட்சி கொடுத்து சாப விமோசன நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சிக்கும் நடைபெறுகிறது.
ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.