விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் உள்ள நிலையில், காரியாபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 2 வாக்குச்சாவடியும், காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 வாக்குச்சாவடியும், காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளியில் 5 வாக்குச்சாவடியும், கற்றலில் இனிமை பள்ளியில் 2 வாக்குச்சாவடியும் கே.செவல்பட்டியில் 2 வாக்குச்சாவடியும், கரிசல்குளம் கிராமத்தில் 1 வாக்குச்சாவடியும் என மொத்தம் 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 7 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதட்டமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.