தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று ஆகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருகை தருவது வழக்கம். இந்த கோவிலில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்த வசதியாக 17 உண்டியல்கள் கோவில் நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இங்கு நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மூலம் காணிக்கையாக ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்து 966 ரொக்கப்பணமும், 22 கிராம் தங்கமும், 29 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.