செய்திக்குறிப்புகள்:
- குற்றாலம் பேரருவி, ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்.
- சுற்றுலா பயணிகள் வருகையால் கடை வியாபாரிகள் மகிழ்ச்சி.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகள் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக திகழ்கிறது. இங்குள்ள பழைய குற்றாலம், பேரருவி, பழத்தோட்ட அருவி, புலி அருவி, செண்பகாதேவி அருவி, ஐந்தருவி, தேனருவி, சிற்றருவி ஆகிய இடங்களில் குளித்து மகிழ வருடம் தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். மே - ஜூலை மாதங்களில் சீசன் களைகட்டும் நேரத்தில் சுற்றுலா பயணிகளாலும், கார்த்திகை மாதம் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தாலும் நிரம்பி வழியும் குற்றாலத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரே வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணிகளின் வருகையால் குற்றாலம் மீண்டும் பொலிவு பெற்று வருகிறது. நேற்று குற்றாலத்தில் உள்ள பேரருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் குறைந்த அளவு தண்ணீர் விழுந்த போதிலும், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. இதனால் இப்பகுதி வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.