திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ள சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் - ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோயிலில் நடைபெறும் ஆனித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவில் நடைபெறும் ஆனித் தேரோட்டம் உலக புகழ் பெற்றதாகும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை பெற்ற திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் தேர் ஓடும் வீதிகள் அனைத்தும் மக்கள் கூட்டமாகக் கூடி நின்று தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை கண்டு களிப்பார்கள். சுமார் 500 வருடங்களுக்கு மேலாக தடைகள் ஏதும் இல்லாமல் வருடந்தோறும் தொடர்ந்து ஓடிய ஒரே தேர் என்ற பெருமை பெற்ற இந்தத் திருநெல்வேலி தேர், முதல் முறையாக சென்ற ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக திருக்கோயில் விழாக்கள் நடைபெற தடை விதிக்கப்பட்ட நிலையில், தேரோட்டம் அன்று ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டின் தேரோட்டத்திற்கு உரிய நாள் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் கொரோனா நோய் தொற்று காரணமாக திருக்கோயில் விழாக்கள் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளதால் இவ்வருட ஆனித் தேரோட்டம் நடைபெறுமா என்ற கேள்விக்குறி திருநெல்வேலி வாழ் மக்களிடையே எழுந்துள்ளது. விரைவில் நோய் பரவல் கட்டுக்குள் வந்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று திருநெல்வேலி மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.