திருநெல்வேலி மாநகரில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், ஆங்காங்கே பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதும், அதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கவர்களை கைப்பற்றி அபராதம் விதிப்பது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக, மாநகரில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் சுவீட் கடைகளில் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களைக் கட்டி கொடுக்க பனையோலைகளில் செய்யப்பட்ட பெட்டிகள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. ஒரு கிலோ, இரண்டு கிலோ, அரை கிலோ மற்றும் தேவையான அளவுகளில் இந்தப் பெட்டிகள் மொத்தமாக உடன்குடி பகுதியில் உள்ள பனையோலை பொருட்கள் தயார் செய்யும் தொழிலாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இது தவிர பனையோலைகளால் செய்யப்பட்ட விசிறிகள், பாய்கள், கூடைகள், சொளவுகள் ஆகிய பொருட்களும் மாநகரில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளன. தற்போது மக்களிடமும் பாரம்பரிய பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு உண்டாகி வரும் நிலையில், பனையோலை பொருட்களின் விற்பனையை அதிகரிக்க துவங்கி உள்ளது. இதன் மூலம் பனை மரங்களை சார்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டு வருகிறது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.