திருநெல்வேலியில் உள்ள ஹைகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தமிழக அரசின் உத்தரவுப்படி ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கியது. இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு அடுத்தபடியாகத் திருநெல்வேலியில் மருந்து விற்பனை கடந்த சனிக்கிழமை முதல் துவங்கப்பட்டுள்ளது., இங்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து 100 எம்.ஜி அளவுள்ள 6 குப்பிகள் ரூபாய் 9408 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மருந்து தேவைப்படுவோர் மருத்துவரின் பரிந்துரை சீட்டு, சி.டி ஸ்கேன் அறிக்கை, ஆர்.டி.பி.சி.ஆர் அறிக்கை, நோயாளியின் ஆதார் கார்டு நகல், மருந்து வாங்க வருபவரின் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாகத் திருநெல்வேலியிலும் இந்த மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதால் நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.