தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆத்திப் என்பவர் நேபாள நாட்டில் நடைபெற்ற யூத் கேம் இண்டர்நேஷனல் சேம்பியன்ஷிப் - 2022 போட்டிகளில், 14 வயதிற்குட்பட்ட குத்துச்சண்டைப் போட்டியில் சீனியர் பிரிவில் பங்குபெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதனை அடுத்து அந்த மாணவனை தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கபீர், செங்கோட்டை குத்துச்சண்டை பயிற்சியாளர் திரு.ஜாகீர் உசேன் பாராட்டி கௌரவித்தார்கள். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.முருகேசன், உடற்கல்வி இயக்குனர் திரு.சஞ்சய்காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.