திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி மாநகராட்சி, அம்பை, விக்கிரமசிங்கபுரம், களக்காடு நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு வரும் 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பெயர், சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி நேற்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. வருகிற 16/02/2022 ஆம் தேதிக்குள் மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி முடிவடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் உத்தரவிட்டுள்ளதை அடுத்து சின்னங்கள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.