தை மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, திருக்குறுங்குடி நம்பி கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குமிந்த வண்ணம் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் தை மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு முப்பது நாட்கள் விரதம் இருந்து தென் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக திருக்குறுங்குடி மலைக்கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன்களை செலுத்தி பெருமாளை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டின் தை மாத கடைசி சனிக்கிழமையான இன்று திருக்குறுங்குடி பெருமாளை தரிசிக்க திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, கோபாலசமுத்திரம், மேலத்திடியூர், தச்சநல்லூர், ராஜபதி, கோட்டூர், கல்லூர், சேரன்மகாதேவி, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளை சார்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக திருக்குறுங்குடிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.