தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வரும் 21/06/2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த திங்கள்கிழமை அன்று ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் காரணமாக நெல்லை மாநகரில் உள்ள சாலைகள் முழுவதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் போக்குவரத்து மாநகரில் பெருகியுள்ளது.
தற்போதைய ஊரடங்கு தளர்வுகளால் டீக்கடைகள், முடி திருத்தும் நிலையங்கள், இனிப்பு லாலா கடைகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளதால் கடைகளில் பொருட்கள் வாங்கவும் மக்கள் ஆர்வமாக குவிவதால், காலை மணி முதலே மாநகரில் உள்ள வண்ணாரப்பேட்டை, ஸ்ரீபுரம், திருநெல்வேலி டவுன் ரத வீதிகள், பாளையங்கோட்டை மார்க்கெட் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நிரம்பி காணப்படுகிறது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.