தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குற்றாலத்தில் இந்த வருடம் ஜூன் மாத துவக்கத்திலேயே சீசன் சரியாக துவங்கியுள்ளதால் சாரல் மழை கொட்டுகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம், செண்பகாதேவி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பரவலாக விழுகிறது.
குற்றாலத்தில் நேற்று சாரலுடன் கூடிய இதமான சூழல் நிலவியது. இதமான தென்றல் காற்று வீசியது. பேரருவியில் பாதுகாப்பு வளைவு மீது தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் நன்றாக தண்ணீர் விழுகிறது. தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக பொது மக்கள் அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலம் அருவி பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.