தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலாக பரவி வந்த நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், ரயில்கள் மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயங்கி வந்தது. இதனால் ரயில்வே துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தெற்கு ரயில்வே அறிவுறுத்தியிருந்தது. இதற்காக தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மாநகர நல அலுவலர் மருத்துவர் திருமதி.சரோஜா அவர்கள் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை சுகாதார துணை இயக்குனர் மருத்துவர் திரு.வரதராஜன் மட்டும் நெல்லை ரயில் நிலைய மேலாளர் திரு.முருகேசன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இந்த முகாமில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை, வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜென் அளவு பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு கோவிட் தடுப்பூசிகளும் போடப்பட்டன. இத்தகைய சிறப்பு முகாம்கள் மூலம் மதுரை ரயில்வே கோட்டத்தில் இதுவரை 4494 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.