திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் ஆக்சிஜன் அளவும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் ஆகியவற்றில் இருந்தும், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் இருந்தும் கூடுதல் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.
எனினும் நாளுக்கு நாள் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒடிசாவில் இருந்து சுமார் 12 டன் ஆக்சிஜன் டேங்கர் லாரியில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, மருத்துவமனை சேமிப்பு டேங்கில் நிரப்பப்பட்டது. இந்த ஆக்சிஜனை கொண்டு அடுத்த மூன்று நாட்களின் தேவையை சமாளித்து கொள்ளலாம் என்றும், மேற்கொண்டு தேவைப்படும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மருத்துவமனை நிர்வாகம் சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.