திருநெல்வேலி மாநகரத்தில் கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக தற்போது நோய் தொற்று குறைந்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் சுமார் 50,000 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநகரில் ஆங்காங்கே தினமும் 20,000 முதல் 25,000 நபர்களுக்கு கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
மாநகரில் பல இடங்களில் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே நேரில் சென்று களப்பணி மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளால், மாநகர் பகுதிகளில் தற்போது கொரோனா நோய் பரவல் குறைந்து வருகிறது. எனினும் கொரோனா நோய்த்தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வரை, பொது மக்கள் அனைவரும் ஊரடங்கு நடவடிக்கைகளை பின்பற்றி மாநகர நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.