திருநெல்வேலி மாநகரில் கொரோனா நோய் தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநகரில் உள்ள திருமண கூடங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மாநகரில் உள்ள இந்த கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும், வழங்கப்படும் உணவு வகைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் பற்றியும் இணையதள சேவை மூலம் ஏற்படுத்தப்பட்ட காணொளி காட்சி வழியாக கேட்டறிந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் உடன் கலந்துரையாடினார்.
இதுபோல மேலும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையங்களில் இணையதள சேவை செய்யப்பட்டு தினமும் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.