தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், தனியார் வாகன போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாநகரின் முக்கிய இடங்களான வண்ணாரப்பேட்டை சந்திப்பு, தெற்கு புறவழிச்சாலை, சந்திப்பு இரட்டை மேம்பாலம், சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, சுவாமி நெல்லையப்பர் ரத வீதிகள், பாளையங்கோட்டை தெற்கு பஜார், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி ஆகியவைகள் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக காணப்பட்டது.
மாநகரில் பிற்பகல் 12.00 மணி வரை செயல்பட்ட காய்கறி கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளிலும் அதிக மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது. பேருந்துகள் இயங்காததால் வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக புறவழிச்சாலை பணிமனையில் அரசு பேருந்துகள் அனைத்தும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் போக்குவரத்து நிறைந்து காணப்படும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. மாநகரில் போக்குவரத்து காவலர்கள் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து ஊரடங்கை கண்காணித்து வந்தனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.