தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உட்பட 23 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரில் உள்ள நகைக்கடை, ஜவுளிக்கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
நேற்று முதல் இந்த புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை முதல் பேருந்துகள் இயங்க தொடங்கின. இதன் காரணமாக நேற்று நேற்று மாநகர சாலைகளில் முழு அளவில் போக்குவரத்து நடைபெற துவங்கி உள்ளதால் திருநெல்வேலி மாநகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, முருகன்குறிச்சி சிக்னல் பகுதி, கதீட்ரல் சர்ச் பகுதி, கொக்கிரகுளம் பகுதி, ஸ்ரீபுரம், திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருநெல்வேலி டவுன் ரத வீதிகள், குற்றாலம் சாலை, பேட்டை சாலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வாகனங்கள் நெருக்கடியாக ஊர்ந்து சென்ற வண்ணம் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.