திருநெல்வேலியில் புதிய காவல்துறை துணை ஆணையாளராக திரு.சுரேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார்!
திருநெல்வேலி மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளராக இருந்த திரு.ராஜராஜன் அவர்கள், தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் திருநெல்வேலி மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு புதிய துணை ஆணையாளராக சென்னை தமிழக சிறப்பு காவலர் பயிற்சி பள்ளியின் படைத்தலைவராக பணியாற்றி வந்த திரு.சுரேஷ்குமார் அவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து திரு.சுரேஷ்குமார் அவர்கள் நேற்று திருநெல்வேலியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திரு.சுரேஷ்குமார் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திருநெல்வேலி மாநகரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், ரவுடியிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும், ஜாமீனில் வெளியே வந்துள்ள பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைெவளியை கடைபிடிப்பதுடன் தங்களது கைகளை அடிக்கடி சுத்தம் செய்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.