செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டத்தில் கொளுத்தும் கோடை வெயில்.
- இளநீர், பதநீர், நுங்கு, சர்பத் விற்பனை ஜோர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் காலம் துவங்கியுள்ளதால், மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், சேரன்மகாதேவி, களக்காடு, பணகுடி, வள்ளியூர், நாங்குநேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் மக்கள் ஆறு, குளம், அருவி போன்ற நீர்நிலைகளில் குளிக்க குவிந்து வருகின்றனர். மேலும் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் உஷ்ணத்தை தவிர்க்க இளநீர், சர்பத், நுங்கு சர்பத், பதநீர், மோர், கம்பங்கூழ், கேப்பை கூழ் போன்ற பானங்களை ஆர்வமுடன் வாங்கி பருகி வருகின்றனர்.
Image source: Facebook.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.