Logo of Tirunelveli Today

பாளையங்கோட்டையில் தமிழ் சங்கங்களின் தமிழ் கூடல் நிகழ்ச்சி விழா

September 10, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை பாளையங்கோட்டையில் பதினொன்றாம் தேதி தமிழ் சங்கங்களின் தமிழ் கூடல் நிகழ்ச்சி விழா நடைபெற இருக்கிறது.
  • மகாகவியின் நூற்றாண்டு நினைவுநாளை நினைவு படுத்தும் வகையில் இந்த விழா நடைபெறப் போவதாக பொதிகை தமிழ் சங்க தலைவர் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழ்ச் சங்கங்களின் தமிழ் கூடல் நிகழ்ச்சி விழா நடைபெற இருக்கிறது. மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளை நினைவு படுத்தும் வகையில் பொதிகை தமிழ்ச் சங்கம் இந்த விழாவை நடத்துவதாக பொதிகை தமிழ்ச் சங்க தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;

பொதிகை தமிழ் சங்கம் பலவிதமான தமிழ் மொழியை மேம்படுத்தும் வகையில் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது .மகாகவி பாரதியாரின் படைப்புகள் மற்றும் அவரது புகழ் உலகமெங்கும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் பன்னாட்டு கருத்தரங்கம்,கவியரங்கம் போட்டிகள் என பல நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு , தமிழ் கூடல் விழா எனும் நிகழ்ச்சியை இப்பொழுது நடத்த இருக்கிறது.

11-9-20 22ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது. பாளையங்கோட்டை வா.உ.சி மைதானத்தில் பின்புறம் உள்ள அய்யம்பெருமாள் அரங்கத்தில் இந்த விழா அனைத்திலும் இருந்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு அவர்கள் இந்த விழாவினை தலைமை தாங்கி விருதுகள் வழங்க இருக்கிறார்.

சிறந்த 10 அமைப்புகளுக்கு 'தமிழன்னை 2022' என்ற விருது வழங்கப்பட இருக்கிறது . அனைத்து விதமான போட்டிகளும் நடைபெற உள்ளது . வெற்றி பெறும் 10 பேருக்கு தமிழக தமிழ் கவிச்சுடர் என்ற விருது வழங்கப்படுகிறது. கல்லூரிகளில் சிறந்த விதத்தில் செயல்படும் 2 தமிழ் மன்றங்களுக்கு ' தமிழ் பணிசுடர் 'என்ற விருதும் வழங்க இருக்கிறோம். பொதுமக்கள் , தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம் என்று பொதிகை தமிழ் சங்க தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2023 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify