Logo of Tirunelveli Today

திசையன்விளையில் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்

September 14, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை திசையன்விளையில் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு அவர்கள் துவங்கி வைத்தார்.
  • அதைத்தொடர்ந்து ரூபாய் 19 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள ஆக்சிஜன் பைப்லைன் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் ஸ்மார்ட் வகுப்பறைகள் பள்ளிக்கூடங்களில் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார் . உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளி, திசையன்விளை ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி ,பெட்டைகுலம் மீராசாஹிப் மேல்நிலைப்பள்ளி என அத்தனை பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டது .

தலா 2 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்க விழா மற்றும் இலவசமாக மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா அனைத்தும் அந்தந்த பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .

ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு தலைமைதாங்கி தொடக்கி வைத்தார். இலவசமாக மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி உரையாற்றினார். ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் , மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ். ஆர் ஜெகதீஷ் , பேரூராட்சி கவுன்சிலர் கமலா சுயம்புராஜன் , அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன்போன்ற பலர் விழாவில் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து ரூபாய் 19 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள ஆக்சிஜன் பைப்லைன் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அடிக்கல் நாட்டி வைத்த சபாநாயகர் அப்பாவு அதன்பின் பேசியதாவது ;

மாநகர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு கிடைக்கக் கூடிய மருத்துவ வசதிகள் அனைத்தும் கடைக்கோடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கிடைக்கவேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்று பேசினார். அனைத்து விழாக்களும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify