இன்று முதல் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கோடை கால கத்திரி வெயில் தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த அக்னி வெயில் இம்மாதம் வரும் 29-ம் தேதிவரை நீடிக்கிறது. ஏற்கனவே பல நாட்களாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது அக்னி வெயிலும் தொடங்க உள்ளது. ஏற்கனவே கொரோனா நோய் தொற்றுக் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். முடிந்த வரை பகல் பொழுதில் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிற்குள் இருப்பது நன்மை தரும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளான பதநீர், இளநீர், நுங்கு, சர்பத், எலுமிச்சை சாறு போன்ற நீராகாரங்களை உட்கொள்வதன் மூலம் நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். மக்கள் அனைவரும் இந்த அக்னி வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். எனவே அக்னி வெயிலை சமாளிக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவோமாக.!

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.